வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு காலில் காயத்தோடு திரும்பிய ரோபோ சங்கர்.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் பரபரப்பு.!
வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு காலில் காயத்தோடு திரும்பிய ரோபோ சங்கர்.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் பரபரப்பு.!
சென்னையில் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரோபோசங்கரின் வீடு சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது. அவரது வீட்டின் முன்பும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, வழியில் ஒரு தகரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்ட ரோபோ ஷங்கர், அதை அப்புறப்படுத்தி தன்னுடைய வீட்டிற்கு முன் போட்டுள்ளார். அப்போது அவரது காலில் அந்த தகரம் கிழித்து காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்ததைக் கூறி வீடியோ வெளியிட்டுள்ள ரோபோ ஷங்கர், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும், மேலும் பாலுத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362