ஆரி அப்படிப்பட்டவர்தான்! மோசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரியோவின் மனைவி! என்னதான் நடந்தது?
ஆரியை குறித்து மோசமாக பேசிய நெட்டிசனுக்கு ரியோவின் மனைவி ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆதி, ரியோ சோம்,பாலா ரம்யா, ஷிவானி, கேப்ரில்லா ஆகியோர் மட்டும் உள்ளனர்.
ரியோவின் மனைவி ஆரி பற்றி கூறிய பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சமீபத்தில் நெட்டிசன்கள் சிலர் ரியோவின் வீடியோவை கிண்டல் செய்தும் அவரை கோமாளி எனவும் விமர்சனம் செய்திருந்தனர். இதனை கண்ட ரியோவின் மனைவி ஸ்ருதி, சிலர் அவமானப்படுத்தும் வகையில் அவரை கோமாளி என கூறியதை கண்டேன். தனது கவலைகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒருவரை நான் நேசிப்பது எனக்கு பெருமையே. நீ கோமாளியாவே இரு என கூறியிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் அந்த பதிவிற்கு, ரியோ சிறந்தவர் தான், அந்த பொய்யான ஆரியை விட என கமெண்டு செய்திருந்தார். அதற்கு ஸ்ருதி, ரியோவுக்கு ஆதரவு கொடுங்கள். ஆனால் அதற்காக மற்ற எந்த போட்டியாளரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்.
ஆரி அண்ணாவும் ஒரு சிறந்த மனிதர்தான். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றபோது நான் அதை பார்த்தேன். அங்கு எல்லாரும் அவர்களது விளையாட்டைதான் விளையாடுகிறார்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362