×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் மனைவியையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது" பேட்டியின் போது கதறியழுத ரவீந்திரன்..

என் மனைவியையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது பேட்டியின் போது கதறியழுத ரவீந்திரன்..

Advertisement

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குனருமான இருப்பவர் ரவீந்திரன். இவருக்கும் பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சின்னதிறையில் 2019 ஆம் வருடம் 'சொல்ல மறந்த கதை' என்ற சீரியலில் நடிககும் போது ரவீந்தருடன் பழக்கமாகி அது காதலாகியது.

இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகிய பலரும் இவர்களைக் கிண்டல் செய்த பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் இவர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகினர்.

இதற்கிடையே தயாரிப்பாளர் ரவீந்தரின் மீது பாலாஜி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் ப்ராஜெக்ட் நடத்துவதற்காக 16 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இதற்காக ரவீந்திரன் சில மாதங்களுக்கு முன்பு கைதானர்.

இது போன்ற நிலையில், ரவீந்திரன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்து பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்பீட்டியில் கைதானதை குறித்து பேசியிருந்தார். அப்போது திடீரென்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். "என்னையும் என் மனைவியும் யாராலும் பிரிக்க முடியாது. எனக்கு உண்மையாவே மகாலட்சுமி தான் அவ. என்னால் சிறையில் உட்கார்ந்து எழுந்துக்க கூட முடியவில்லை" என்று புலம்பித் தள்ளினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Youtube #interview #Viral #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story