×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுக்கு விமானத்தில் நேர்ந்த கொடுமை!

Rajinikath son in law lost passport and money in flight

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகன் விஷாகனின் பணம் மற்றும் பாஸ்போர்ட் விமானத்தில் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விஷாகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. சௌந்தர்யாவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். 

விஷாகன் வெளிநாடுகளில் பல தொழில்களை நடத்தி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் செய்வது வழக்கம். 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஷாகன் தனது மனைவி சௌந்தர்யாவுடன் லண்டன் சென்றார். இவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் புறப்பட்டனர். 

விமானம் லண்டன் சென்றதும் பயணிகள் இறங்க துவங்கினர். அப்போது விஷாகன் தான் வைத்திருந்த பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் காணாமல் போனதை உணர்ந்தார். அவரது பர்ஸில் நிறைய அமெரிக்க டாலர் வைத்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவர்கள் லண்டன் விமான நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகன் என தெரிந்துகொண்டனர். அதன் பிறகு அவருக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #Rajinikath son in law #soundarya-vishakan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story