×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல வில்லன் ரகுவரன் - ரோகினியின் மகனா இது! இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க-வைரலாகும் புகைப்படம்

Rahuvaran rohini son

Advertisement

தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் முதலில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். அதன் பின்னர் சிறிய சிறிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திடிரென ஒரு நாள் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் அவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதனால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பமானார். 

அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான பாட்சா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் அளவுக்கு இவரின் கதாபாத்திரத்திம் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் இவர் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து ரிஷி வரன் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் ரகுவரன் மற்றும் ரோகினி தம்பதியினர் பிரித்துள்ளனர்.

ரகுவரனும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு நாள் திடீரென்று உடல் நல குறைவால் ரகுவரன் காலமானார். இந்நிலையில் தற்போது அவரின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rahuvaran #Rohini #Son photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story