ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் 25 ஆயிரம்..! 50 மாற்றுத்திறனாளிகளின் மனதை குளிரவைத்து ராகவா லாரன்ஸ்.!
Raghava lawrence gave 25 thousands to differently abled persons
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழகியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
கொரோனா நிவாரண நிதியாக பலரும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் நிவாரண கணக்கிற்கு நிதி வழங்கிவருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் மத்திய அரசு நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக அரசின் நிவாரண பணிக்கும் என மொத்தம் 3 கோடி நிதி அறிவித்தார்.
அதுமட்டும் இல்லாமல் துப்புரவு தொழிலார்கள் நலனுக்காக 25 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார், மேலும், செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர் நலனுக்காக ரூபாய். 15 லட்சம் கொடுத்துள்ளார். இதுபோக 50 லட்சம் சினிமா துறையை சேர்ந்த பெப்சி அமைப்புக்கும், 50 லட்சம் நடன இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மேலும், 75 இலட்சம் ராயபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காவும் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். பல்வேறு வகைகளில் உதவி வரும் நடிகர் ராகவா லாரன்ஸூக்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்துவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362