×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மார்பகங்களை பெரிதாக்கினால்தான் படவாய்ப்பு., இல்லன்னா கிடையாது..! முயற்சியால் உடல் எடை கூடிய நடிகை கொந்தளிப்பு..!!

பெண்களிடம் அத்துமீறும் பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ளிடுவேன் - ராதிகா ஆப்தே அதிரடி.!

Advertisement

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. வேலூர் மாவட்டத்தை சொந்தமாக கொண்ட இவர் ஹிந்தி திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானதை தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜின் நடிப்பில் வெளியான தோனி படத்தில் அசத்தியிருந்தார். 

மேலும் 2013-ல் ஆல்இன்ஆல் அழகுராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்திலும் ரசிகர்களை கவரும் கதாப்பாத்திரத்தில் கலக்கினார்.

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் இரண்டாவது பாகத்தில் இவர் நடித்திருந்த நிலையில், அதன் பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் மற்றும் பிறமொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் திரைத்துறைக்கு வரும்போது மூக்கின் அமைப்பு சரியாக இல்லை. மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று பலரும் விமர்சித்தார்கள். மார்பகங்களை பெரிதாக்கி கொண்டு வாருங்கள் என்றும் கூறியிருந்தார்கள். 

அதற்கான முயற்சிகள் எடுத்து 4 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை மீண்டும் இழந்தேன் . பலரும் தங்களின் உடலை பற்றி தங்களின் உரிமையாக கருதுகிறார்கள். இப்போது யாராவது அப்படி பேசினால் சுட்டு தள்ளிவிடுவேன்" என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#radhika apte #Tamil actress #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story