×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுக்கடலில் தவறி விழுந்த பிரியங்கா சோப்ரா! அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் புகைப்படங்கள்

priyanga chopra fallen down in miomi

Advertisement

தளபதி விஜய் நடித்து வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற இவர் அங்கேயும் சாதித்து காட்டினார். அதன்பின்னர் பிரபல ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் இவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மியாமி கடற்கரைக்கு சென்று கப்பலில் பயணித்துள்ளார். 

அப்போது சிறிய படகு ஒன்று பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் தோழிகளுடன் நடு கடலில் பயணம் செய்துள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக பிரியங்கா சோப்ரா படகிலிருந்து தவறி கடலில் விழுந்து விட்டார். அவரது கணவர் பிடிக்க முயன்றும் தடுக்க முடியவில்லை. பிறகு கப்பலில் வந்த பாதுகாப்பு வீரர்கள் பிரியங்கா சோப்ராவை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyanka chopra #miomi beach #priyanga falling in sea
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story