×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரேமம் படம் இயக்குனருக்கு திடீரென்று என்ன ஆச்சு.? வெளியான அறிக்கையால் திரைத்துறையில் பரபரப்பு.!

பிரேமம் படம் இயக்குனருக்கு திடீரென்று என்ன ஆச்சு.? வெளியான அறிக்கையால் திரைத்துறையில் பரபரப்பு.!

Advertisement

தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தமிழில் முதன் முதலில் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான ' நேரம் ' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இதனையடுத்து மலையாளத்தில் 2015 ஆம் வருடம் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்திற்கு பின்பு கோல்ட் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து அல்போன்ஸ் புத்திரன் படங்களை இயக்காமல் திரைத்துறையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.

தற்போது இவருக்கு ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக அல்போன்ஸ் புத்திரனே அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதன்பின்பு திரைப்படங்களை இயக்கப் போவதில்லை எனும் அதிரடியான முடிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Premam #Neram #Kollywood #controversy #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story