×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சினிமாவால் வாழ்வில் பாதிப்பை சந்தித்த, இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ்.. அவரே வேதனையுடன் வெளியிட்ட தகவல்.!

சினிமாவால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதித்துள்ளது.. இயக்குனர் பிரசாந்த் நீல் வேதனை.!

Advertisement

கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல்ஸ். இவர் யஷை வைத்து இயக்கிய கே ஜி எஃப் 1 மற்றும் 2ம் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்திய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் சலார் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் புதிய விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய போது, "சலார் படப்பிடிப்பினால் எனது குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர்களை சந்திக்க வீட்டிற்கு செல்வேன். நான் சரியான தந்தையாகவும், கணவனாகவும் இல்லை. சலார் பட பணிகள் காரணமாக எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதித்துள்ளதாக' வேதனையாக கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salar #Prashant Neel #kgf #Prabhas
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story