அம்மாடியோவ்.. இவ்வளவா! முதல் நாளிலேயே வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன்.! எவ்வளவு தெரியுமா??
அம்மாடியோவ்.. இவ்வளவா! முதல் நாளிலேயே வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன்.! எவ்வளவு தெரியுமா??
கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு நீண்ட ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, பல தடைகளைத் தாண்டி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், ரஹ்மான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதல் நாளிலேயே படம் வசூலை வாரி இறைத்துள்ளது.
அதாவது ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 25.86 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் ரூ. 78.29 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் வசூல் வேட்டை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362