×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸில் பரபரப்பு புகார்.! என்ன காரணம்.?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸில் பரபரப்பு புகார்.! என்ன காரணம்.?

Advertisement

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பெயர் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக காவல்துறை அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #vihnesh shivan #complaint
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story