பரவிவரும் கொரோனா! நடிகை காஜல் திருமண பிளானில் ஏற்பட்ட மாற்றம்!
கொரோனோ அச்சுறுத்தலால், நடிகை காஜல் அகர்வாலின் திருமண பிளானில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் வரும் அக்டோபர் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவரே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருமணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மும்பையில் நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக காஜல் வீட்டிலேயே திருமணம் நடைபெறவிருப்பதாகவும், திரைப்பிரபலங்களை தவிர்த்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களும் திருமணத்துக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது