அவர் பேச நான் சிரிப்பேன், ஆனால் இன்று இல்லை.. மறைந்த பிரபல நடிகர்! கண்ணீருடன் பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான பதிவு!!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து, தனது நகைச்ச
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து, தனது நகைச்சுவையான பேச்சால், உடல் அசைவுகளால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நெல்லை சிவா. இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் நெல்லை சிவா அவர்கள் இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு தமிழ் திரையுலக பிரபலங்களின் தொடர் உயிரிழப்புகள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை சிவா மறைவிற்கு நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவுகளுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், பாத்திரம் வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவனாக இல்லாமல் பாத்திரத்தையே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கோடி கோடியாக வந்த பணம் கொண்டு மனம் பல வாங்கினேன். நான் தந்த காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க வங்கி வாசலில் காவல் இருந்த அப்பாவி நெ.சிவா. அவர் பேச நான் சிரிப்பேன். இன்று இல்லை என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362