×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணகி திரைப்படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் பா. ரஞ்சித்: என்ன சொன்னார் தெரியுமா?.!

கண்ணகி திரைப்படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் பா. ரஞ்சித்: என்ன சொன்னார் தெரியுமா?.!

Advertisement

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் கண்ணகி. இப்படத்தை இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.

4 பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கண்ட பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கண்ணகி திரைப்படம் தமிழ் திரையுலகத்திற்கு தேவையான முக்கியமான திரைப்படம். 

இந்த படத்திற்கு பின்னர் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக யஷ்வந்த் இருப்பார். பெண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் இருந்து சொல்வது சரியாக ஒரு இயக்குனராக அவர் கற்றுக் கொண்ட விஷயங்கள். சமூகத்தின் மீது தான் வைத்திருக்கும் அக்கறையை தெளிவுபடுத்தி இருக்கிறார். 

இந்த படம் கட்டாயம் பெரிய அளவில் பேசப்படும். நல்ல விவாதத்தையும் உண்டாக்கும். பார்வையாளர்களுக்கும் இப்படம் பிடித்த திரைப்படமாக இருக்கும். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள்" என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #சினிமா செய்திகள் #Latest news #cinema news #தமிழ் சினிமா #கண்ணகி #Kannagi Movie #Ranjith speech
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story