வசூலின் உச்சத்தை தொட்ட அஜித்தின் நேர் கொண்ட பார்வை! இதுவரை இத்தனை கோடி வசூலா - உற்சாகத்தில் தல ரசிகர்கள்.
NKP padam padaitha vasul sathanai
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய சமூக நீதிகருத்து கொண்ட படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இது உலகம் முழுவதும் மொத்தம் ரூ 108 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 74 கோடி வசூல் செய்துள்ளது.தற்போது கூட சென்னை ரோகினி திரையரங்கில் நேர்கொண்ட பார்வை 50வது நாள் கொண்டாட்டமும் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362