நேர்கொண்ட பார்வை படத்தில் தல பேசும் முதல் வசனம் வெளியாகியுள்ளது - ரசிகர்கள் உற்சாகம்!
nkp-ajith
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடலான அகலாதேவில் அஜித் மற்றும் வித்யா பாலனின் ரொமாண்டிங் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது தல அஜித் பேசும் முதல் வசனம் வெளியாகியுள்ளது.இந்த வசனத்தை கேட்ட அஜித் ரசிகர்கள் பட வருகைக்காக மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதோ,
* எப்பவுமே யோசிச்சு நடக்கனும்
* நடந்துகிட்டு யோசிக்க கூடாது
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362