பாண்டியன் ஸ்டோர் சீரியலிருந்து விலகிவிட்டாரா கதிர்? இனி அவருக்கு பதில் இவரா! தீயாய் பரவிய ஷாக் தகவல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து கதிர் விலகவுள்ளதாக செய்தி பரவி வந்த நிலையில் அதில் உண்மையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக குமரன் நடித்துள்ளார். மேலும் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா நடிக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடரில் கதிராக நடித்துவந்த குமரன் கதாபாத்திரத்தை காட்டவில்லை. இந்நிலையில் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகி விட்டார் எனவும், அவருக்கு பதில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் கதிராக நடிக்கும் குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், படப்பிடிப்புக்காக அவர் பெங்களூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362