×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே.. தாலி கட்ட சில நொடிகளுக்கு முன் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! அவர் சொன்ன காரணத்தை கேட்டா ஷாக்காகிடுவீங்க!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் ப

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று, திருமணம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணப்பெண் மாப்பிள்ளையிடம் பேசியுள்ளார். அப்பொழுது அவர் மாப்பிள்ளையின் படிப்பை சோதனையிட எண்ணி அவரிடம் இரண்டாவது வாய்ப்பாட்டை கேட்டுள்ளார்.

மாப்பிள்ளையும் விளையாட்டாக தான் கேட்கிறார் என எண்ணிக்கொண்டு சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண் ஒரு சாதாரண கணக்கு கூட தெரியாதவரை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என திருமணத்தை நிறுத்தும்படி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

அவரது பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும், படிப்பறிவு இல்லாத வரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என அந்த மணப்பெண் உறுதியாக நின்றுள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக உறவினர்களும் பேசியுள்ளனர். மேலும் இப்படியெல்லாம் ஒரு காரணத்தை சொல்லலாமா என மணமகனின் குடும்பத்தார்களும் ஆதங்கப் பட்டுள்ளனர்.  பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் மாப்பிள்ளை பரிதாபமாக நின்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #bride #groom
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story