"மேகமாய் வந்து போகிறேன்" ஹிட் பாடலை கொடுத்த முத்துவிஜயன் காலமானார் - சோகத்தில் திரைத்துறையினர்.
Muthuvijayan died yesterday

தமிழ் சினிமாவில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் "மேகமாய் வந்து போகிறேன்" என்ற பாடல் மூலம் பிரபலமானார் பாடலாசிரியர் முத்துவிஜயன்.
மேலும் 'பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.
இவர் இதுவரை 800 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் வேறும் பாடலாசிரியர் மட்டுமின்றி வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவராக திகழ்ந்தவர்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று மாலை 4 மணியளவில் உயிர் இழந்தார். இவரின் மறைவு தமிழ் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.