×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போக்கிரி, ஆயிரத்தில் ஒருவன் பட எடிட்டர் உயிரிழப்பு! சோகத்துடன் திரைப்பிரபலங்கள் இரங்கல்!

போக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோலா பாஸ்கர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போக்கிரி, வில்லு மற்றும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.

இவர் கடந்த சில நாட்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில் கோலா பாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cola baskar #dead #cancer
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story