×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் தனிமையில் இருக்கும்போது அந்த மாதிரி விஷயத்தை தான் பண்ணுவேன்" பேட்டியில் உண்மையை போட்டுடைத்த மிஸ்கின்..

நான் தனிமையில் இருக்கும்போது அந்த மாதிரி விஷயத்தை தான் பண்ணுவேன் பேட்டியில் உண்மையை போட்டுடைத்த மிஸ்கின்..

Advertisement

கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கி  வெற்றி படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். மேலும் இவர் இயக்கத்திற்கென ரசிகர் கூட்டங்கள் உண்டு.

தமிழில் முதன் முதலில் 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மிஷ்கின். இப்படத்திற்குப் பின்பு பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து தற்போது இயக்குனரிலிருந்து நடிகராக களமிறங்கி இருக்கிறார் மிஷ்கின். ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அறியப்படும் நடிகராக இருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபோன்ற நிலையில், சமீபத்தில் ஒரு யுடியுப் சேனலில் பேட்டியளித்த மிஷ்கின் தனிமையில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதாவது, "நான் தனிமையில் இருக்கும் போது மனசு கஷ்டமாக இருந்தால் பிச்சைக்காரர்களை சந்தித்து அவர்களுடன் பேசுவேன். இல்லையென்றால் என் குழந்தையிடம் பேசுவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார். மிஷ்கினும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 14 வருடங்களாக பிரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Miskin #director #Leo #vijay #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story