×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிப்பதற்காக வடிவேலு செய்த காரியம்... உண்மையை போட்டு உடைத்த மீசை ராஜேந்திரன்.!

குடிப்பதற்காக வடிவேலு செய்த காரியம்... உண்மையை போட்டு உடைத்த மீசை ராஜேந்திரன்.!

Advertisement

தமிழ் சினிமாவில் ராஜ்கிரன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் தன்னுடைய கடின உழைப்பாலும் நடிப்பு திறமையாலும் உயர்ந்து  இன்று நகைச்சுவையின் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாமன்னன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தனக்கு போட்டிக்கு ஆளே இல்லை என்ற ஒரு காலகட்டத்தில் வடிவேலு அதிகமாக ஆணவம் கொண்டு ஆடியதால் பல காலமாக சினிமாவில் இருந்தே ஓரம் கட்டப்பட்டார். சினிமாவில் காமெடி நடிகராக இருந்தாலும் நிஜத்தில் அவரது முகம் கோரமுகம் என அவருடன் பணியாற்றிய  நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படி வடிவேலுவுடன் பணியாற்றி அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மீசை ராஜேந்திரன் வடிவேலு செய்யும் வேலைகள் பற்றி தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில்  வடிவேலு தயாரிப்பாளர் இடமிருந்து தனது வண்டி மேக்கப் அசிஸ்டன்ட் என எல்லோருக்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வரை பேட்டா வாங்கி விடுவாராம். தயாரிப்பாளர்களும் இவர் கேட்கும் காசை கொடுத்து விடுவார்கள்.

ஆனால் இந்த பணத்தை எல்லாம் அசிஸ்டன்களுக்கு கொடுக்காமல் 100, 200 என்று மட்டும் கொடுத்துவிட்டு மீதியிருக்கும் காசை அவரை எடுத்துக் கொள்வாராம். இந்த காசை வைத்து குடித்து அவர் நாட்களை கழிப்பார் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கென வரும் சம்பளத்தை பத்திரமாக வைத்துக் கொள்வார் அதிலிருந்து செலவு செய்ய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார் மீசை ராஜேந்திரன். சமீப காலமாகவே வடிவேலுவின் உண்மை முகம் பற்றி இதுபோன்ற பேட்டிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #meesairajendran #kollywoodnews #tamilcinema #newcontroversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story