×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜாமீன் கேட்டு கோரிக்கை வைத்த மீரா மிதுன்! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!!

மாடல் அழகியும், பிக்பாஸ் பிரபலமுமான மீரா மிதுன்  அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும்,

Advertisement

மாடல் அழகியும், பிக்பாஸ் பிரபலமுமான மீரா மிதுன்  அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் அவதூறாக, தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக அவரை கைது செய்ய வேண்டும் என பல தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். 

 இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவருக்கு துணையாக இருந்த அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யபட்டார்.

இந்நிலையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அவர் வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி தவறாக பேசியதாக தெரிவித்துள்ளார்.  மேலும் பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்ட நிலையில், நீதிபதி  ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
   

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meera mithun #bail #Dismissed
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story