அஜித்- ஷாலினி காதலுக்கு உதவிய பிரபல நடிகர்! அவர்கள் பயன்படுத்திய அந்த ரகசிய வார்த்தை என்ன தெரியுமா?
Malaiyala actor talk about ajith shalini love
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவர் நடிகர் ஷாலினியை காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற அழகிய இருபிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலித்த சமயத்தில் நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்களை பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்தபோதே காதலித்து வந்துள்ளனர். அப்பொழுது ஷாலினி மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு படப்பிடிப்புகளில் இருந்தபோது செல்போனிலேயே பேசி வந்துள்ளனர். மேலும் ஷாலினியிடம் செல்போன் இல்லாததால் மலையாள பட நடிகர் குஞ்சாக்கோ போபனின் செல்போனுக்கே அஜித் அழைப்பாராம். மேலும் அப்பொழுது அவருக்கு மட்டும்தான் இருவரது காதல் விவகாரமும் தெரியுமாம்.
இந்நிலையில் அஜித் போன் செய்து, ஷாலினியுடன் கொடுக்கும்போது, யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அந்த நடிகர் ஏகே 47 காலிங் என ரகசிய வார்த்தை பயன்படுத்தியே அவரை அழைப்பாராம். அதனைப் புரிந்துகொண்டு ஷாலினியும் போனை வாங்கிகொண்டு தனியாக சென்று பேசுவாராம்.
பின்னர் நாளடைவில் இதுகுறித்து அப்பட இயக்குனர் கமலுக்கும் தெரியவந்த நிலையில், அவரும் அடிக்கடி ஏகே 47 போன் பேசவில்லையா என கிண்டலாக கலாய்ப்பாராம்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362