×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"விஜய் படம் பாக்க போன போது இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை" மாரி செல்வராஜின் கலகலப்பான பேட்டி..

விஜய் படம் பாக்க போன போது இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை மாரி செல்வராஜின் கலகலப்பான பேட்டி..

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். இதன் பின்பு 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு பின்பு தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார்.

கர்ணன் திரைப்படம் வெற்றியடைந்து தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை வழங்கி மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு சினிமா விருந்தை படைத்தார். தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இன்று வெளியானது.

இது போன்ற நிலையில், சமீபத்தில் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட பேட்டியில் விஜயை குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, "நான் ஒரு தீவிர விஜய் ரசிகன். அவரது படம் பார்க்க ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ  சென்று விடுவேன். அவ்வாறு செல்லும் போது பஸ்ஸிலிருந்து வேகமாக இறங்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து விட்டேன் என்று கலகலப்புடன் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #maari #director #movie #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story