கைக்குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கிய நமிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கைக்குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கிய நமிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தெலுங்கில் "சொந்தம்" என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நமீதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், 2004ம் ஆண்டு "எங்கள் அண்ணா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஏய், சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், பச்சக்குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர்.
நமீதா சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பில் தனது கணவர் மற்றும் ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்ததால், ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதையடுத்து நமீதாவின் குடியிருப்புக்குள்ளும் ஆறடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்துள்ளதாகத் தெரிகிறது. இன்னும் அங்கு மீட்புக் குழுவினர் வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது.