×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்வராகவன் குறித்து உருக்கமாக பேசிய அவரது தந்தை.!

செல்வராகவன் குறித்து உருக்கமாக பேசிய அவரது தந்தை.!

Advertisement

பெரும்பாலும் கிராமத்துக் கதைகளை பின்னணியாக கொண்டு திரைப்படம் எடுத்து பிரபலமானவர் கஸ்தூரி ராஜா. இவர் கடைசியாக "துள்ளுவதோ இளமை" படத்தை பாதி மட்டும் இயக்கியிருந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் செல்வராகவன் அதை இயக்கி முடித்தார்.

இதையடுத்து அவர் இரண்டாவது படமாக "காதல் கொண்டேன்" படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் தான் தனுஷுக்கும், செல்வராகவனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என்று படங்களை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்ட செல்வராகவன், அவரை விவாகரத்து செய்துவிட்டு, தன் உதவி இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்துகொண்டார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் குறித்து அவரது தந்தை பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் "செல்வராகவனை அப்படியே விட்டிருந்தால் அவன் பைத்தியமாகியிருப்பான். கீதாஞ்சலி வந்த பிறகு தான் அவன் மாறியிருக்கிறான்" என்று கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selvaragavan #cinema #News #Viral #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story