×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சிரிப்பழகி நடிகை! அதுவும் எந்த படத்தில் தெரியுமா??

16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சிரிப்பழகி நடிகை! அதுவும் எந்த படத்தில் தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதனை தொடர்ந்து அவர் முதல்வன் ரோஜாவனம், நடிகர் அஜித்துடன் இணைந்து தீனா மற்றும் பரமசிவன், சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து,மௌனம் பேசியதே, தில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அவரது சிரிப்புக்கெனவே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் ஈரானை சேர்ந்த தொழிலதிபர் மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின் லைலா படங்களில் நடிப்பதை தவிர்த்து இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பின் நடிகை லைலா மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதாவது அவர்  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சிம்ரன்தான் முடிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பில்  சில மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் பின்னர் சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காத நிலையில் அதில் லைலா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#laila #re entry #sardar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story