தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"சிநேகிதனே சிநேகிதனே கோவை சரளா பாடிய பாடல்" ஞாபகமிருக்குதா.. இப்பாடல் உருவான விதம் குறித்து மனம் திறந்த கோவை சரளா.!

சிநேகிதனே சிநேகிதனே கோவை சரளா பாடிய பாடல் ஞாபகமிருக்குதா.. இப்பாடல் உருவான விதம் குறித்து மனம் திறந்த கோவை சரளா.!

Kovai sarala openup in interview about her comedy scene Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக தற்போது வரை நிலைநாட்டி வருபவர் கோவை சரளா. தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் மிகவும் குறைவு. இதில் மனோரமாவிற்கு பிறகு தற்போது வரை கோவை சரளா இடம் பிடித்து வருகிறார்.

Kovar sarala

தனது காமெடி திறமையின் மூலம் 80களில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். காமெடியான பேச்சுக்காகவே ரசிகர்கள் கூட்டம் பலரை ஈர்த்துள்ளார்.

கோவை சரளா முதன்முதலில் பாக்யராஜ் நடிப்பில் வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடித்தார். இதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள், நான் சிகப்பு மனிதன், எங்கள் குரல், ஜப்பானில் கல்யாணராமன், யாரோ எழுதிய கவிதை, இனி ஒரு சுதந்திரம், சின்ன குயில் பாடுது, எங்க ஊரு காவல்காரன் போன்ற நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதுபோன்ற நிலையில், 'ஷாஜகான்' திரைப்படத்தில் கோவை சரளா பிச்சைக்கார கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ஸ்நேகிதனே எனும் பாடலை பாடி இந்த காட்சி மிகப் பெரிய ஹிட்டானது. முதலில் இயக்குனர் இந்த பாடல் பாட வேண்டாம் மிகப்பெரிய ஹிட் பாடல், ரசிகர்கள் திட்டுவார்கள் என்று கூறினாராம். ஆனால் இதனை மறுத்து கோவை சரளா இப்பாடலைப்பாடி இக்காட்சி மிகப்பெரிய ஹிட்டாகிருக்கிறது என்று பேட்டியில் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kovar sarala #actress #Comedy viral #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story