×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING : என்னால முடியல... நான் மிகவும் சோர்வாகிவிட்டேன்! எனக்கு அமைதி வேணும்.... நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன்! பாடகி கெனிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு..!!!

சமூக வலைதள சர்ச்சைகளுக்கு மத்தியில் பின்னணி பாடகி கெனிஷா பிரான்சிஸ், சென்னையை விட்டு வெளியேறி சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்த பின்னணி பாடகி கெனிஷா பிரான்சிஸ், தற்போது சென்னையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்தும் தற்காலிகமாக விலக முடிவு செய்திருப்பதாக அவர் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனநிலையை வெளிப்படுத்திய அவர், தேவையற்ற தீர்ப்புகள் மற்றும் இணையவழி தாக்குதல்கள் காரணமாக மிகுந்த சோர்வுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சில காலம் அமைதியாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உருக்கமான பதிவால் பரபரப்பு

கெனிஷா வெளியிட்ட பதிவில், “நான் சொல்ல வேண்டியதை விட அதிகமாகவே பேசிவிட்டேன். மிகுந்த அன்புடன் இந்த விஷயத்தில் நுழைந்தேன். ஆனால் இப்போது அமைதியாக வெளியேறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ.... எனக்கு ஒரு நிமிஷம் கூட நிம்மதி இல்லை! குழந்தை வளர்ப்பதில் உள்ள சிரமம் குறித்து குளியலறையில் உட்கார்த்து கதறி கண்ணீர் விட்டு அழும் தாயின் வீடியோ !!!

மேலும், தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இடத்தில் தன்னை நிரூபிக்க இனி முயற்சிக்கப் போவதில்லை என்றும், ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் இணையதள துன்புறுத்தல்கள் காரணமாக சோர்வடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது இசை, சிகிச்சை மற்றும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையையே விட்டு வெளியேறுவதாக அவர் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவிமோகன் விவகாரத்துக்கு பின் அதிகரித்த விமர்சனம்

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கெனிஷாவுக்கு தடை விதித்திருந்தது.

அதன்பின் சமூக வலைதளங்களில் அவரை குறிவைத்து பலரும் கருத்துகள் வெளியிட்டனர். இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

வீடியோ மூலம் விளக்கம்

இதற்கு முன் வெளியிட்ட வீடியோவில், சிறுவயதிலேயே திருமணம் ஆனது, பெற்றோரை இழந்தது, கருச்சிதைவு உள்ளிட்ட பல வேதனைகளை வாழ்க்கையில் சந்தித்ததாக கெனிஷா பேசியிருந்தார். “அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நான் இன்னொருவரின் குடும்பத்தை கெடுப்பேனா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ரவி மோகன் தெரபிக்காக மட்டுமே தன்னிடம் வந்தார் என்றும், அவர் குழந்தை அல்ல என்பதால் தனது முடிவுகளை அவரே எடுத்துக்கொள்ளக்கூடியவர் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களிலிருந்தும், சென்னையிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: புற்றுநோய்யால் போராடும் மனைவி! முடியை தொட்டாலே வலி..... மனைவிக்காக நொடிப்பொழுதில் கணவன் செய்த செயல்! கண்கலங்கி நின்ற மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை....இவ்வளவு தாங்க வாழ்க்கை!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kenisha Francis #கெனிஷா பிரான்சிஸ் #Ravi Mohan #சென்னை #Social media
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story