3, 4 தடவை! அதுவும் வேறுவேறு நபர்களுடன்.. செம கடுப்பான கீர்த்தி சுரேஷ்! ஏன் தெரியுமா?
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதைத்தொடர்ந்து அவர்
விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் கீர்த்திசுரேஷ்
தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, டோவினோ தாமஸுடன் வாஷி மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அனிருத்துடன் காதல், தொழிலதிபருடன் திருமணம் எனத் தகவல்கள் பரவி வரும்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, சில இணையதளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 முறை செய்திகள் வெளிவந்தது. அதுவும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பரவி வரும் வதந்திகள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் நிறைய காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362