கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
தற்போது கொரோனாவிலுருந்த தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்து இணையத்தில் பரவிய தகவலால் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் பெரிதாக முன்வரவில்லை. தற்போது தடுப்பூசியின் முக்கியத்துவைத்தை அறிந்த பலரும் தங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், சினிமாபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362