×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப சோதனையான காலக்கட்டம்.!ஆனால்.. நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அறிக்கையை பார்த்தீங்களா!!

ரொம்ப சோதனையான காலக்கட்டம்.!ஆனால்.. நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அறிக்கை!

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த 'சாணிக் காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஒரு நடிகையாக இருப்பது என்பது ஏற்ற இறக்கங்கள் கொண்ட கடினமான பயணம். முழுவதும் பல உயர்வு, தாழ்வுகளை காண்கிறோம். அவையே நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீப சில காலங்கள் எனக்கு சோதனையான காலகட்டம். மேலும் எனது சிறந்ததை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணரவைத்துள்ளது. சாணி காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்களுக்கு கிடைத்த அன்பால் எனது இதயம் முழுவதும் நன்றியுணர்வும் சந்தோஷமும் நிறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்களுக்கு, நீங்கள்தான் என் பலம். உங்களால்தான் நான் இங்கே இருக்கிறேன், அதற்காக நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்களது ஆதரவுதான் என் வழியில் வரும் தடைகளை சமாளிக்க தூண்டுகிறது என பலவற்றையும் பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi Suresh #Statement #thanks
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story