×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த உலகை விட்டு விடைபெறுகிறேன்! பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சியா.! அவரே வெளியிட்ட பகீர் பதிவு!

Kannada actress jayasri ramiah tweet in depression

Advertisement

கன்னட சினிமாவில் கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களில் நடித்து, தற்போது வளர்ந்து வரும் இளம் நாயகியாக இருப்பவர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா. மேலும்  அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜெயஸ்ரீ ராமையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மிகுந்த மனசோர்வில் உள்ளேன். இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட  அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தனர்.  ஆனால் அப்பொழுது நடிகை ஜெயஸ்ரீயின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர்களால்  பேசமுடியவில்லை.

இந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று மாலை ஜெயஸ்ரீ மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில்,  நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன்.அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று அறிவித்திருந்தார். மேலும் முந்தைய பதிவையும் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஜெயஸ்ரீ பெங்களூரில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியதாகவும் அதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் அவர் தற்கொலை முயற்சி செய்ய எண்ணியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayasri ramaiah #suicide #tweet
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story