×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது!! செம காட்டத்தில் தாம்தூம் நடிகை! எதனால் தெரியுமா??

சுஷாந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின்  வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழில் தாம்தூம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தால் மன உளைச்சலாலே சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கங்கனா, சுஷாந்த் சிங்கின் பிறந்த நாளான இன்று அவரது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள சுஷாந்த், திரைப்பட மாஃபியா உங்களை தடை செய்தது, உங்களை துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டிருக்கிறாய். அப்போது உன்னுடன் நான் உறுதுணையாக நிற்கவில்லையே என்று வருந்துகிறேன். சுஷாந்த் சிங் தன்னுடைய பேட்டிகளில் வாரிசு அரசியலை பற்றி குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய ப்ளாக்பஸ்டர் படங்கள் அனைத்தும் தோல்விப்படங்களாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தன்னை தடை செய்தது குறித்தும், கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றி சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என்று கூறியது குறித்து சுஷாந்த் அழுததை மறந்துவிட வேண்டாம். எல்லோரும் சேர்ந்து 
சுஷாந்த்தை கொன்றுள்ளனர்.  இதனை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது என கங்கனா காட்டமாக கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sushanth singh #kangana ranavut
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story