×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா எதிரொலி: பெப்சி ஊழியர்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவியை வழங்கிய தலைவி பட நடிகை..!

Kangana donate 5 lakh to papasi team

Advertisement

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இவ்வைரஸானது தற்போது இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. அதேபோல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பெப்சி ஊழியர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். 

இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பெப்சி ஊழியர்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Papsi #kangana #5 lakh
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story