கமலை கடுமையாக விமர்சித்த அமைச்சர்! இது தான் காரணமா!
Kamal amaicher jayakumar

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். மேலும் இந்நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
மேலும் இந்நிகழ்ச்சி கலாசார சீரழிவு மற்றும் ஆபாசம் நிறைந்த ஒரு ஷோ என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமலை பற்றி தமிழக அமைச்சர் ஜெயகுமார் ஒரு பேட்டி ஒன்றில் இவ்வாறு பேசியுள்ளார்.
அதாவது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ஏற்படுவதற்கு வித்திட்டவர் வசூல்ராஜா MBBS என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டை பற்றியும் பேசியுள்ளார். அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அலிபாபா குகை போல உள்ளது எனவும் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு எனவும் கூறியுள்ளார்.