ஏன் இப்படி செஞ்சீங்க? சர்க்கார் படக்குழு மீது செம கடுப்பில் கலாநிதிமாறன்! என்ன காரணம் தெரியுமா?
Kalanaithimaran get angry with sarkar movie team

நடிகர் விஜய் என்றாலே அமைதியானவர், அதிகம் பேசமாட்டார் என்ற பெயர் மாறி தற்போது தான் பேசு மேடைகளில் தனது பேச்சால் தெறிக்கவிடுகிறார் நடிகர் விஜய். அண்மையில் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புரளியை கிளப்பியது.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய், பிரசன்னா பேசும் ஒரு உரையாடல் இருந்தது. அது ரசிகர்களை வெகுவகாக கவர்ந்தது, ஆனால், இந்த உரையாடல் முன்பே பேசி வைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின.
இதெல்லாம் விஜய், முருகதாஸ் ஏற்கனவே பிளான் பண்ணித்தான் இதை செய்ததாகவும் ஆனால் இது தயாரிப்பாளர் கலாநிதிமாறனுக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது.
மேலும், இதனால், கலாநிதிமாறன் கடும் அப்செட்டில் இருப்பதாகவும், பேட்ட இசை வெளியீட்டு விழா எல்லாம் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது எனவும் கலாநிதிமாறன் உத்தரவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது உண்மையா இல்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.