இனி ஒரு பிரோயோஜனமும் இல்லை, மறுபடியும், மறுபடியும் ஏமாத்துறாங்க.! கடுப்பான பிரபல நடிகை, எதற்காக தெரியுமா?
இனி ஒரு பிரோயோஜனமும் இல்லை, மறுபடியும், மறுபடியும் ஏமாத்துறாங்க.! கடுப்பான பிரபல நடிகை, எதற்காக தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், கடந்த வாரம் பாலாஜி, யாஷிகா உட்பட 2 போட்டியாளர்கள் உட்பட 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரித்விகா, ஜனனி,விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் இறுதிகட்டத்தில் உள்ளனர்.
இந்த நால்வரில் ஐஸ்வர்யாவுக்குத்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், அப்படியே இல்லை என்றாலும் அவரைத்தான் வெற்றி பெறவைக்க பிக்பாஸ் சூழ்ச்சி செய்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி ட்விட்டரில் இந்த நிகழ்ச்சி பற்றி மிககடுமையாக விமர்சித்துள்ளார்.
"இனி பிக்பாஸில் ஓட்டு போட்டு என்ன பிரோயோஜனம்.. மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்கள். ஏமாத்துறவங்க இருக்க வரைக்கும் ஏமாத்திட்டே தான் இருப்பாங்க. நம்புனது நம்ம தப்புதான். இந்த ஷோவில் இருந்து விலகி இருப்பது தான் நல்லது" என காஜல் பசுபதி கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362