நடிகர் சூர்யா இந்த படத்துடன் ஓடிவிடுவார் என நினைத்தேன்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்.
K. V. Anand told about suriya
இயக்குனர் K.V. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுவரை 23 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது சூர்யா பற்றிய புதிய தகவலை இயக்குனர் K. V. ஆனந்த் கூறியுள்ளார். அதாவது சூர்யா நடித்த முதல் படமான "நேருக்கு நேர்" படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஆனந்த்.
எனவே அந்த படத்திலிருந்து தற்போது எப்படி நடித்துள்ளார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு K. V. ஆனந்த் இவ்வாறாக பதில் கூறியுள்ளார். அதாவது நேருக்கு நேர் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அவரை பார்த்துவிட்டு இவர் இந்த படத்தோடு சினிமாவை விட்டு ஓடிவிடுவார் என்று தான் நினைத்தேன்.
ஆனால் அதன் பிறகு பாலா, அமீர், கவுதம் மேனன் போன்ற இயக்குனர்களிடம் நிறைய கற்று கொண்டுள்ளார். தற்போது மிகவும் அருமையாக நடித்துள்ளார் என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362