தனது கணவருடன் சேர்ந்து நடிகை ஜெனிலியா செய்த காரியம்!! நன்றி கூறி குவியும் வாழ்த்துக்கள்!!
jenilia donate 25 lakhs to maharasthra flood

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.
கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சுமார் 4 லட்சம் மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு உதவ நடிகை ஜெனிலியாவும், அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிடம் 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.