பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்... வீடு புகுந்து தீவிரவாதிகளால் படுகொலை.. போலீசார் வலைவீச்சு..!
பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்... வீடு புகுந்து தீவிரவாதிகளால் படுகொலை.. போலீசார் வலைவீச்சு..!
தீவிரவாதிகள் சிலர் வீடு புகுந்து பிரபல நடிகையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியை சேர்ந்தவர் அம்பிரீன் பட். இவர் பிரபல டிவி ஒன்றில் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் திடீரென அம்பரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் துப்பாக்கி சூடு நடத்திய தப்பியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அம்பரீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த 10 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையடுத்து, தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதற்காக அம்பரீனை அவர்கள் கொலை செய்ய முயன்றார்கள்? என்று விசாரணை செய்துவரும் நிலையில், தீவிரவாதிகளையும் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362