"ரஜினி அப்பாவுடன் நடித்தது என் வாழ்வின் பொக்கிஷம்" ஜெயிலர் வசந்த் ரவி உருக்கம்.!
ரஜினி அப்பாவுடன் நடித்தது என் வாழ்வின் பொக்கிஷம் ஜெயிலர் வசந்த் ரவி உருக்கம்.!

கடந்த சில வாரங்களுக்கு முன், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து மூன்று வாரங்களை கடந்தும், படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயிலர் படத்தில், வசந்த் ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவி, சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, " ஜெயிலர் படத்தில் ரஜினி அப்பாவுடன் நடித்த ஒவ்வொரு நொடியும் என்றும் என் வாழ்வில் அழியாத நினைவாக இருக்கும்.
ரஜினி சாருடன் இருந்த நாட்கள் தான் என் வாழ்வின் பொக்கிஷம். அவர் கூறிய கருத்துக்கள் சினிமாவில் மட்டுமின்றி, வாழ்க்கை பற்றிய புரிதலையும் எனக்கு கொடுத்துள்ளது. ரஜினி அப்பாவுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.