×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சவுத் பக்கம் வரும் ஐஸ்வர்யா ராய்-வெளியான புதிய தகவல்!

ishwariya rai reentry in tamil

Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலமொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். 

குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய் தற்பொழுது மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி  வெளிவந்துள்ளது.

மேலும் பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக இருந்த ஐஸ்வர்யா ராய், இதுவரை டோலிவுட்டில் கால் பதிக்கவில்லை.இந்நிலையில் தற்போது முதல் முறையாக நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இந்தப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ishwarya rai #reentry #tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story