காதல் தோல்வியால் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்! அவரே கூறிய பதிவு.
Iliyana open talk

தமிழில் கேடி படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். ஆனால் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரித்துள்ளனர்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானார். அதனால் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். அதனை தொடர்ந்து மன அழுத்தத்தை சரிசெய்ய மருத்துவரை அனுகியுள்ளார். அங்கு அவருக்கு 12 மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதனை சாப்பிட்டதால் உடல் எடை கூடியதாகவும் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இலியானா.