தற்கொலை முயற்சி செய்த நபர்.! அப்போது ஒலித்த இசைஞானி இளையராஜா பாடல்.! ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.!
தற்கொலை முயற்சி செய்த நபர்.! அப்போது ஒளித்த இசைஞானி இளையராஜா பாடல்.! ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.!
டிஜிட்டல் மீடியாவை வேறு பாதைக்கு கொண்டு சென்றவர்கள் பிளாக் ஷீப் டீம் என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த டிஜிட்டல்பிரபலங்களையும் அழைத்து மிகப்பெரிய விழா ஏற்பாடு செய்து விருதுகளை வழங்கி அசத்தினர் பிளாக் ஷிப் டீம். மேலும், அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி மூலமும் ஒளிபரப்பி ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தனர்.
தற்போது சன் தொலைக்காட்சியில் பிளாக் ஷிப் டீம், இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்தும் வகையில் ராஜபார்வை எனும் இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர். கடந்த எபிசோட்டில் திருவாரூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தார்.
அப்போது அவர் பேசுகையில் தான் சென்னைக்கு வேலைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். பின்னர் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என முடிவு செய்து சொந்த ஊருக்கு சென்று விட்டேன். அப்போது எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்கள் நேர்ந்தன. இதனை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்து தற்கொலைக்கு முயன்றபோதுதான், இளையராஜா அவர்களின் ஒரு பாடலை கேட்டேன். அதன்பிறகு எனது ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிவிட்டது.
அது என்ன பாடல் என்றால் ”மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்... மனச பாத்து தான் வாழ்வ மாத்துவான்....” என்ற பாடல்தான். இந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் எனது வாழ்க்கையை தொடங்கி தற்போது ஒரு பெரிய பெரிய நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362