மேடையில் சந்திக்கிறேன்.! இசைஞானி வெளியிட்ட பதிவு! யாருக்காக? என்ன காரணம் பார்த்தீங்களா!!
மேடையில் சந்திக்கிறேன்.! இசைஞானி வெளியிட்ட பதிவு! யாருக்காக? என்ன காரணம் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து, அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைவராலும் விரும்பக்கூடிய முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த இசையமைப்பாளராக விளங்கிவரும் அவர் இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
மேலும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அவர் பல நாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி தனது ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் 18-ஆம் தேதி சென்னையில் “ராக் வித் ராஜா” என்னும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.
அதில் இளையராஜாவும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்கள் பாட உள்ளனர். இந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் மிகவும் உற்சாகமாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் “எனது கனவு நனவாகப் போகிறது” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா “உன்னை மேடையில் சந்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.