×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கௌதம் மேனன் திரைப்படத்தால் வருத்தம் அடைந்தேன்" - நடிகை ரித்து வர்மா பேட்டி.!

கௌதம் மேனன் திரைப்படத்தால் வருத்தம் அடைந்தேன் - நடிகை ரித்து வர்மா பேட்டி.!

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம்  சிம்ரன் ஐஸ்வர்யா ராஜேஷ் கிருஷ்ணா வம்சி பார்த்திபன் ராதிகா சரத்குமார் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் இந்தப் படத்தின் வெளியீடு தடை செய்யப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் கதாநாயகி ரித்து வர்மா. இது தொடர்பாக பேட்டியளித்த அவர் தான் கௌதமேனனின் தீவிர ரசிகை என குறிப்பிட்டுள்ளார். அவரது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்தது மிகச் சிறந்த அனுபவம் என குறிப்பிட்ட அவர் இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போவதால் வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தப் படம் வெளியாவதற்காக நீண்ட நாள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பிரச்சனைகள் விரைவில் பேசி முடிக்கப்படும் என கௌதம் மேனன் திறப்பு சமீபத்தில் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Kollywood #Dhruva Natchathiram #vikram #Gvm #Ritu Varma
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story