கொரோனோ தொற்றுக்கு பரிதாபமாக பலியான பிரபல இளம் நடிகை! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துயரமும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனோ தொற்றுக்கு ஆளாகி பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா பட்நாகர். 34 வயதே நிரம்பிய அவர் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கொரோனாவால் இளம் நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளது இந்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362